டாக்டர். சுதா சேஷய்யன் அவர்கள் எளிய நடையில் எல்லோராலும் கையாளத்தக்க அழகிய தமிழ் உரையில் கங்காப்ரவாஹம் போன்ற நடையில் மனதில் பக்தி பாவத்தை வளர்க்கும் வண்ணம் அருளிய இந்த பக்திப் பெட்டகம் ‘ஸ்ரீ லலிதா’ ஆகும். வாசிக்கும்பொழுது புத்தகத்தை மூடி வைக்க மனம் இடம் கொடுக்கா வண்ணம், சுவையாக ஜனங்களின் மனதை புரிந்து அமைக்கப்பட்ட கட்டுரைக் கோவையே இப்புத்தகம்.