கலையும் கனவுகள்..!
by V.Usha
ரேணுகா பொறுமை இழந்து கொண்டிருந்தாள். பத்தாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தாள். மணலும், நான்கைந்து டூ வீலர்களும், வலைகளும், மீனவர்களும்தான் தெரிந்தார்கள். மணி பார்த்தாள், மூன்றரை! ஈஷ்வருக்கு ஏன் பங்க்சுவாலிடி என்பதே இல்லை என்று மறுபடி நினைத்தபோதே எரிச்சலாக இருந்தது. காக்க வைக்கிற பழக்கம். முன்னால் வந்துதான் உட்கார்ந்திருக்கட்டுமே என்கிற நினைப்பா? ஸ்டூடன்ட்தானே நீ, என்னை மாதிரி பொறுப்பான வேலை...